Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வள்ளியம்மாள்புரத்தில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரணி

பிப்ரவரி 16, 2023 04:48

கடையம் : வெய்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மடத்தூர் ஊராட்சி வள்ளியம்மாள்புரத்தில் 7 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு  என்ற தலைப்பில்,; இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கடையம் யூனியன் திமுக பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும்,கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவருமான பொன்ஷீலா பரமசிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித், தொழிலதிபர் பரமசிவன், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் அருண்குமார் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்